
‘இஸ்லாம் ஒரு புற்றுநோய்’ எனக்கூறிய
ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனை –
பிணை மனுவையும் நீதிமன்றம் நிராகரிப்பு
இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஜனவரி 09ஆம் திகதி இன்று தீர்ப்பளித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக 1500 ரூபா அபராதம் விதித்து கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டார்.
2016ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் திகதி கொழும்பு – கிருலப்பனையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் “இஸ்லாம் ஒரு புற்றுநோய் – அதை ஒழிக்க வேண்டும்” என்றார். ஞானசார தேரரின் இந்த பிரகடனம் நாடுகளுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு குற்றவியல் சட்டத்தின் 291ஆவது பிரிவின் கீழ் அவருக்கு எதிராக பொலிஸார் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.
இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டில் 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிணை கோரிக்கையையும் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இன்று நிராகரித்தார்.
அந்தத் தண்டனைக்கு எதிராக அவர் மேன்முறையீடு செய்திருப்பதால் மேன்முறையீட்டு மனு விசாரணை செய்யப்பட்டு இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் வரை ஞானசார தேரரை பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் இந்த பிணை கோரிக்கையை சமர்ப்பித்திருந்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக ஞானசார தேரரை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.